குடிபோதையில் விவாதம்: பவர் ஸ்டார் ரசிகரை குத்திக் கொன்ற ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்
கோலார்: கர்நாடகாவில் நடிகர் பவன் கல்யாணின் ரசிகர் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு நடிகர்களான பவன் கல்யாண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி உறுப்பினர் வினோத் குமார்(24) தனது நண்பர்கள் 4 பேருடன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் வினோத் குமார் மேடையில் பேசியது எதிர்தரப்பை கோப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை அடுத்து அதில் கலந்து கொண்டவர்கள் நரசபுராவில் உள்ள பார் ஒன்றுக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.
அப்போது வினோத் குமாருக்கும், ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகரான அக்ஷய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அக்ஷய் வினோதை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த வினோத் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அக்ஷயை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே பவன் கல்யாண் வினோதின் வீ்ட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications