முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு நாளை விடுதலை!
முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலை அடைகிறார்.
கொல்கத்தா: முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலை அடைகிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜூன் 20ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், தலைமை நீதிபதி உள்ளிட்ட பலரின் மீது ஊழல் புகார் செய்து இருந்தார். இது பெரிய பிரச்சனையாக மாறியது. இதையடுத்து அவர் உடனடியாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

ஆனால் கர்ணன் மீது உச்சநீதிமன்றம் சில நாளில் அவதூறு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் கர்ணன் தலைமறைவானார். நீதிபதியாக இருந்த கர்ணன் தலைமறைவான நிலையிலேயே ஓய்வும் பெற்றார்.
இந்த வழக்கில் இவருக்கு ஆறுமாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இவரை கண்டுபிடித்து ஜூன் 20ம் தேதி கொல்கத்தா பிரசிடென்சி சிறையில் அடைத்தனர்.
இடையில் இவர் பலமுறை பெயில் கேட்டும் நீதிமன்றம் இவருக்கு பெயில் வழங்க மறுத்து வந்தது. உடல்நல குறைவால் இடையில் சில நாட்கள் போலீஸ் கண்காணிப்பில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஆனாலும் இவரது பெயில் கோரிக்கை ஏற்கப்படவேயில்லை.
இந்த நிலையில் தற்போது தண்டனை காலம் முடிந்து நீதிபதி கர்ணன் நாளை கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலை அடைகிறார்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications