தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும்...ஜெ.வுக்கு கட்ஜு திறந்த மடல்
டெல்லி : தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும், குடியரசு தலைவரிடம் இது குறித்து பேச வேண்டும் எனவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் தலைமை நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு திறந்த மடல் எழுதியுள்ளார்.
இல்லையெனில் ஜெயலலிதா தமிழக முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் மார்கண்டேய கட்ஜு அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இப்போது தமிழை நீதிமன்ற வழக்காடு மொழியாக்குவது முழுக்க முழுக்க தமிழக முதல்வரின் முடிவில் தான் உள்ளது என்பதை தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார் கட்ஜு .
இனியும் தமிழக முதல்வர் தமிழர்களை ஏமாற்றாமல் தனக்கிருக்கும் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி தமிழை வழக்காடு மொழியாக்க ஆவண செய்ய வேண்டும். இல்லையெனில் முதல்வர் பதிவை உடனே ஜெயலலிதா துறக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கட்ஜு தெரிவித்துள்ளார்.
இதே மார்கண்டேய கட்ஜு தான் ஒருகாலத்தில் தமிழர்கள் அனைவரும் இந்தி படிக்க வேண்டும் என்று முகநூலில் செய்தி பகிர்ந்து தமிழர்களிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். தமிழர்களின் பலமான போராட்டங்களையும் எதிர்ப்பையும் உணர்ந்த கட்ஜு இப்போது தமிழை நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று முதல்வருக்கு திறந்த கடிதம் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications