ஊழலை எதிர்ப்பதாக கூறும் ராகுல் லாலுவுடன் கூட்டணிக்கு முயற்சிப்பதேன்?: கே.சி.தியாகி கேள்வி

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :-
பிரதமர் வேட்பாளராக, மோடிக்கு பதில் அத்வானி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங் போன்றவர்களை அறிவித்தாலும், நாங்கள் மீண்டும், அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க போவதில்லை. மதச் சார்பின்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளவர், மோடி. ஆனால், ராகுலால் அந்த ஆபத்தில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஊழல் மற்றும் திறமையின்மையால் தான், மதவாத சக்திகளான, பா.ஜ.,வும், மோடியும் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளனர்.
‘எங்கள் புதிய அரசியல் திட்டத்தில், ஊழல்வாதிகளுக்கு இடமில்லை' என, ராகுல் பேசுகிறார். ஆனால், கால்நடை தீவன ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, லாலு பிரசாத்துடன் கூட்டணி அமைக்க, அவர் முயற்சிக்கிறார். இது அவருடைய, இரட்டை வேடத்தை தான் காட்டுகிறது.
எனவே, தான் ஊழல் மற்றும் மதச் சார்பற்ற, மூன்றாவது கூட்டணியில் இணைந்துள்ளோம். ஆந்திரா மற்றும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள கட்சிகளும், மூன்றாவது கூட்டணியில் கைகோர்க்க உள்ளன. தேர்தல் முடிவுக்கு பின், எங்கள் கூட்டணி தலைவர்கள், பிரதமரை முடிவு செய்வர்' என இவ்வாறு தியாகி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications