ஆப்கான்: காபூலில் செய்தியாளர் மீது தாக்குதல்- பெண் பத்திரிகையாளர் தப்பினார்- தாலிபான்கள் அட்டூழியம்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தாலிபான்கள் கட்டவிழ்த்துவிட்டனர். காபூல் நகரில் செய்தியாளர் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரது கேமரா உள்ளிட்ட பொருட்களை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தாலிபான்களால் தாம் கொல்லப்படுவோம் என்பதால் ஆப்கானிஸ்தானைவிட்டே வெளியேறுவதாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் கதறலுடன் கூறியுள்ளார்.
Recommended Video
ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்கள் தாலிபான்கள் பிடிக்கு வந்த உடனேயே பல்லாயிரக்கணக்கானோர் அந்த நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் அமைச்சர்களாக அரசியல்வாதிகளாக இருந்தவர் வெளிநாடுகளுக்குப் போய் கூலிகளாக வேலைபார்க்கும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
தலைநகர் காபூலுக்குள் தாலிபான்கள் நுழைந்த உடனேயே பத்திரிகை அலுவலகங்களில் கெடுபிடி சோதனைகளை நடத்தினர். இன்னொரு பக்கம் அவ்வப்போது சர்வதேச செய்தியாளர்கள் சந்திப்புகளை நடத்தி ஊடகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் பேசி வருகின்றனர்.

காபூலில் தாக்குதல்
ஆனால் தாலிபான்கள் சொல்வதும் செயல்படுவதும் முரணாகவே இருந்து வருகிறது. வீடு வீடாக சென்று சோதனை நடத்தி பொதுமக்களை அச்சுறுத்துவது, பத்திரிகையாளர்களைத் தாக்குவது ஆகியவை தாலிபான்கள் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கை. காபூலில் இருந்து ஒளிபரப்பாகும் Tolo டிவி சேனல் செய்தியாளர் Ziar Khan Yaad என்பவர் இன்று காபூல் நகரில் செய்தி சேகரித்து கொண்டிருந்த போது கொடூரமாக தாக்கப்பட்டார். காபூலில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதாக தமது டிவி சேனலுக்காக பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தாலிபான் கும்பல் அவரை தாக்கியதுடன் கேமரா, மொபைல் போன் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்து கொண்டது. தாலிபான்களின் இந்த தாக்குதலில் Ziar Khan Yaad கொல்லப்பட்டுவிட்டதாக முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் தாம் உயிருடன் இருக்கிறேன் என்பதுடன் தாலிபான்களால் தாம் தாக்கப்பட்ட சம்பவத்தையும் @ziaryaad என்ற தமது ட்விட்டர் ஐடியில் அவர் பதிவு செய்துள்ளார்.

பெண் பத்திரிகையாளர் கதறல்
இதேபோல் Wahida Faizi என்ற பெண் பத்திரிகையாளர் தாம் தாலிபான்களால் கொல்லப்படுவோம் என்பதால் நாட்டைவிட்டு வெளியேறுவதாக கண்ணீருடன் பி.பி.சி.செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக Wahida Faizi கூறுகையில், நான் இந்த தேசத்தை நேசிக்கிறேன். ஆனால் என்னால் இந்த தேசத்தில் வாழ முடியாது. இங்கேயே நான் இருந்தால் தாலிபான்களால் கொல்லப்படுவேன். அதனால் என் நாட்டைவிட்டு நான் வெளியேறுகிறேன் என காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் நின்று கதறியிருக்கிறார்.

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
காபூல் நகரம் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது முதலே ஏராளமான பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான Parwiz Aminzada கூறுகையில், தாலிபான்கள் பிடியில் காபூல் சிக்கியது முதலே பத்திரிகையாளர்களை தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு தாலிபான்கள் நிர்வாகம் முடிவு கட்ட வேண்டும் என்றார்.

துருக்கிக்கு வேண்டுகோள்
இதனிடையே அமெரிக்கா படைகள் ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்கிற தாலிபான்கள் கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் காபூல் விமான நிலையத்தை கட்டுப்படுத்த துருக்கி ராணுவத்தின் உதவியை தாலிபான்கள் கோரியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications