அமைதிக்கான நோபல் பரிசை நாட்டுக்கு அர்ப்பணித்த கைலாஷ் சத்தியார்த்தி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியரான கைலாஷ் சத்தியார்த்தி, அந்தப் பதக்கத்தை நாட்டுக்கு அர்ப்பணம் செய்து குடியரசுத்தலைவரிடம் வழங்கியுள்ளார்.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த கைலாஷ் சத்தியார்த்தி தான் பெற்றிருந்த நோபல் பரிசுக்கான பதக்கத்தை வழங்கினார்.

நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நோக்கில் கைலாஷ் சத்தியார்த்தி கொடுத்துள்ள நோபல் பரிசு பதக்கம் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்படும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக பணியாற்றியதற்காக நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்த்தி அதனை நாட்டிற்கு அர்ப்பணித்து வழங்கியதை பிரணாப் முகர்ஜி வரவேற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications