பெண் டாக்டருடன் கள்ளத்தொடர்பு, போதை வஸ்து, சினிமா மீது வெறுப்பு: பரபரக்கும் கலாபவன் மணி வழக்கு
திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணிக்கு கஞ்சா உட்கொள்ளும் பழக்கம் இருந்தது, பெண் மருத்துவர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.
கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நடிகர் கலாபவன் மணி கடந்த 6ம் தேதி மரணம் அடைந்தார். அவர் கடைசியாக அருந்திய மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது ஆய்வில் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் 10 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

கஞ்சா
மணியின் உடற்கூறுகளை ஆய்வு செய்ததில் அதில் கஞ்சா மற்றும் பிற போதை வஸ்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒன்று மணி போதை பொருட்கள் எடுத்திருக்க வேண்டும் இல்லை வலி நிவாரணியை அளவுக்கு அதிகமாக உட்கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

கள்ளத்தொடர்பு
மணிக்கும் கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாக அவரின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தொடர்பால் மணி நிம்மியை விவாகரத்து செய்துவிடுவாரோ என்ற பயத்தில் அவரின் உறவினர்கள் இருந்தார்களாம்.

மன அழுத்தம்
மணிக்கு கல்லீரல் பிரச்சனை இருப்பது அவருக்கு தெரிய வந்த பிறகு அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவரது நண்பர்களும், உதவியாளர்கள் 3 பேரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அந்த உதவியாளர்கள் மூன்று பேரும் தான் மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் மது அருந்திய இடத்தை சுத்தம் செய்தனர். ஆனால் அவர்கள் தடயங்களை அழித்துவிட்டதாக மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சினிமா வேண்டாம்
மணி மன அழுத்தத்தின் உச்சத்தில் இருந்ததாகவும், நடிப்பு மீது வெறுப்பு ஏற்பட்டு சினிமாவை விட்டு விலக அவர் திட்டமிட்டதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மணிக்கு கல்லீரல் பிரச்சனை எதுவும் இருந்ததாக தனக்கு தெரியாது என்று நிம்மி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications