அரசு கெடு முடிகிறது: டெல்லி வீட்டில் இருந்து அப்துல் கலாமின் பொருட்கள் அகற்றம்
டெல்லி: டெல்லியில் உள்ள ராஜாஜி மார்க்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டில் இருந்து அவர் பயன்படுத்திய பொருட்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள அரசு அளித்த வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி ஷில்லாங்கில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றியபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இதையடுத்து கலாம் வசித்த வீட்டை அக்டோபர் 31ம் தேதிக்குள் காலி செய்யுமாறு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அவரின் தனி ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பியது.
கால அவகாசம் முடியவிருக்கும் நிலையில் ராஜாஜி மார்க் வீட்டில் இருக்கும் கலாமின் புத்தகங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. அந்த பொருட்கள் அனைத்தும் ராமேஸ்வரத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இதற்கிடையே ராஜாஜி மார்க் வீட்டில் கலாமுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தார் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications