ஜெயலலிதாவுக்கு தண்டனை: காவிரி தண்ணீர் கொடுத்து கன்னட அமைப்பு கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil

காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக செயல்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தமிழகத்துக்கு ஜெயலலிதா தண்ணீரை கொண்டுவந்ததாக கன்னட அமைப்புகளுக்கு கோபம் இருந்தது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா ஒரு முறை பேட்டியளிக்கும்போதுகூட, ஜெயலலிதா கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ, காவிரி பிரச்சினையில் மிகுந்த ஆக்ரோஷம் காண்பிக்கிறார். கருணாநிதி இந்த விஷயத்தில் மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு கிடைத்துள்ள தண்டனையை கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மைசூரில் கொண்டாடினர்.
காவிரி தண்ணீரை பாட்டிலில் பிடித்து கொண்டுவந்து ஒவ்வொருவருக்காக வழங்கி காவிரி தாய் தங்களை காப்பாற்றிவிட்டதாக கூறி மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications