கர்நாடகா தேர்தல் முடிவு தேசிய அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும்.. பாபா ராம்தேவ் பரபர!
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு தேசிய அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
டெல்லி: கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு தேசிய அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டசபையின் 222 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது.
தனிபெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 112 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். சற்றுமுன் நிலவரப்படி பாஜக 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

நாடு முழுவதும் எதிர்ப்பார்ப்பு
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றால் நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிர்ப்பு அலை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என நாடு முழுவதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.

ஆட்சியை கைப்பற்றும்
இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு குறித்து யோகா குரு பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் கட்சி 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும்.

தேசிய அரசியலில் திருப்பம்
பாஜக வெற்றி பெற்று தென்னிந்தியாவில் ஆட்சி அமைக்கும். இது தேசிய அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். இவ்வாறு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

பாபா ராம்தேவ் பரபர பேச்சு
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக தேர்தலில் பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில் பாபா ராம்தேவின் இந்த பரபர பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications