காவிரி மேலாண்மை வாரிய பிரதிநிதியை பரிந்துரைக்க முடியாது: கர்நாடகா அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு!
டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரிய பிரதிநிதியை பரிந்துரைக்க முடியாது என்று கர்நாடகா அரசு கூட்டிய இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி தமிழகத்துக்கான 6,000 கன அடி நீரை திறக்கும் உத்தரவில் திருத்தம் கோரி புதிய மனு ஒன்றை கர்நாடகா இன்று தாக்கல் செய்துள்ளது.
சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்துக்கு காவிரியில் கடந்த செப்டம்பர் 21-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை வினாடிக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்கு பிறகு நடைமுறைப்படுத்தும்படி உத்தரவிடுமாறு கோரி கர்நாடக அரசு திருத்த மனு தாக்கல் செய்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இடைக்கால மனு தாக்கல் செய்தது.

பேச்சுவார்த்தை
இந்த மனுக்களை செப்டம்பர் 27-ந் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த பிரச்சினை தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகளை மத்திய அரசு அழைத்து பேசவேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி நேற்று முன்தினம் டெல்லியில் இரு மாநில அரசுகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

புதிய உத்தரவு
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா அரசை மிகக் கடுமையாக எச்சரித்த நீதிபதிகள், தமிழகத்துக்கு இன்று முதல் 6 நாட்கள் காவிரியில் 6,000 கன அடிநீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலாண்மை வாரியம்
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் கடுமையான கண்டனத்தை சந்திக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். அத்துடன் உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாளில் அமைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அனைத்து கட்சி கூட்டம்
உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவு குறித்து இன்று கர்நாடகா அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருந்தது. இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் திறக்க உத்தரவிடும் உத்தரவில் திருத்தம் கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மனுத்தாக்கல் செய்தது.

மேலாண்மை வாரிய பிரதிநிதி இல்லை
இக்கூட்டத்தின் முடிவில் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான பிரதிநிதியை கர்நாடகா பரிந்துரைக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான பிரதிநிதியான காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications