சித்தராமையாவுக்கு செம ஆதரவு.. பரிதாப இடத்தில் எதியூரப்பா.. லோக்நிதி சர்வே
பெங்களூரு: கர்நாடகத்தில் மீண்டும் சித்தராமையாவே முதல்வராக லோக்நிதி -சிஎஸ்டிஎஸ் கருத்துக் கணிப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் எதியூரப்பாவுக்கு ஆதரவு மிகவும் குறைவாக காணப்படுகிறது. அவருக்கு 3வது இடமே கிடைத்துள்ளது.
முன்னாள் முதல்வர் எச்.டி,குமாரசாமிக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.
கர்நாடக சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி லோக்நிதி - சிஎஸ்டிஎஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் முக்கிய அம்சங்கள் சில:

சித்தராமையாவுக்கு செல்வாக்கு
சித்தராமையா முதல்வராக 34 சதவீத ஆதரவு கி்டைத்துள்ளது. ஆனால் பாஜகவால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் எதியூரப்பாவுக்கு வெறும் 14 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. இவருக்கு முன்பு குமாரசாமி 19 சதவீத ஆதரவுடன் உள்ளார்.

கார்கேவுக்கும் ஆதரவு
அதேசமயம், யாரும் எதிர்பாராத அளவு மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கணிசமான ஆதரவு காணப்படுகிறது. அதாவது 10 சதவீத ஆதரவு கார்கேவுக்குக் கிடைத்துள்ளது.

பெண்கள் ஆதரவு அதிகம்
சித்தராமையாவுக்கு பெண்கள் மத்தியில் நல்ல ஆதரவு காணப்படுகிறது. அதிலும் நகரங்களில், சிறிய ஊர்களில் சித்தராமையாவுக்கு பெண்கள் ஆதரவு அதிகம் உள்ளது.

பெங்களூர் சித்து பக்கம்
பெங்களூரு நகரில் சித்தராமையாவுக்கு அதிக ஆதரவு உள்ளது. அதேசமயம், எதியூரப்பாவுக்கு நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் ஒரே மாதிரியான ஆதரவு காணப்படுகிறது.

ஜாதி தான் முக்கியம்
கர்நாடக அரசியலில் ஜாதி வாக்குகள் ரொம்ப முக்கியம். அந்தந்த ஜாதிக்காரர்களின் வாக்கு அந்தந்த ஜாதித் தலைவர்களுக்கே போகும். அந்த வகையில் லிங்காயத்துகளின் வாக்கு எதியூரப்பாவுக்கு போகிறது. ஒக்கலிகா வாக்கு குமாரசாமிக்கு போகிறது. கார்கேவுக்கு அவர் சார்ந்த தலித் மற்றும் பிற சமூக குழுக்களின் வாக்குகள் கிடைக்கின்றன.












Click it and Unblock the Notifications