காவிரி பங்கீட்டில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன.. சித்தராமையா தலைமையில் அவசர மீட்டிங்
பெங்களூர்: காவிரியிலிருந்து வரும் 20ம் தேதிவரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, உயர் அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்திவருகிறார்.
பெங்களூரிலுள்ள முதல்வரின் அரசு இல்லமான 'காவிரி'யில், காவிரி தொடர்பான கூட்டம் நடைபெறுகிறது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டில், சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா, மாநில தலைமை செயலர் அரவிந்த் யாதவ், அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக், நீர்வளத்துறை அமைச்சக முதன்மை செயலாளர் ராகேஷ் சிங், மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா, சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் மோகன் கடர்கி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம், வரும் 20ம் தேதிவரை தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும், 20ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. எனவே 20ம் தேதி கர்நாடகா எந்த மாதிரியான சட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications