காவிரி நீர் தரலாமா வேணாமா? - வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆலோசனைப்படி செயல்பட கர்நாடக அரசு முடிவு
காவிரி விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் வழிகாட்டுதலின் படி செயல்பட முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கர்நாடக மாநில அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பெங்களூர் : பற்றாக்குறை காலத்தில் காவிரி நீரை பகிர்வது குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு அமைப்பது குறித்து அனைத்து கட்சியினரிடமும் முதல்வர் சித்தராமையா கருத்து கேட்டார். மேலும் காவிரி விவகாரத்தில் வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆலோசனைபடி செயல்படுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்க அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் கடந்த 5-2-2007ல் வழங்கிய இறுதித் தீர்ப்பில் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு, கர்நாடகா 192 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது.

ஆனால் காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக கடந்த நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்தன.
இந்த அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றம் ஏற்கனவே 15 நாட்களுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பலமுறை உத்தரவிட்ட போதும், கர்நகாடகாஅரசு பற்றாக்குறையை காரணம் காட்டி தண்ணீர் திறந்துவிடவில்லை.
இந்நிலையில் பற்றாக்குறை காலத்தில் காவிரி நீரை தமிழகம்,கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பங்கிட்டு கொள்வது குறித்து கருத்து தெரிவிக்குமாறு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு கூறியிருந்தது.
இதன் அடிப்படையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தரமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மதற்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் பசவராஜ், அமைச்சர்கள், எம்.பி.பாட்டீல், பரமேஸ்வர் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் 4 மாநிலங்கள்எவ்வாறு நீரை பகிர்ந்து கொள்வது என்று அரசியல்கட்சியினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. பற்றாக்குறை கால நீரை பகிர்ந்துகொள்வதற்கான குழுவை அமைப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆலோசனைபடி செயல்படுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications