காவிரி நீர் தரலாமா வேணாமா? - வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆலோசனைப்படி செயல்பட கர்நாடக அரசு முடிவு
காவிரி விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் வழிகாட்டுதலின் படி செயல்பட முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற கர்நாடக மாநில அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பெங்களூர் : பற்றாக்குறை காலத்தில் காவிரி நீரை பகிர்வது குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு அமைப்பது குறித்து அனைத்து கட்சியினரிடமும் முதல்வர் சித்தராமையா கருத்து கேட்டார். மேலும் காவிரி விவகாரத்தில் வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆலோசனைபடி செயல்படுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்க அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் கடந்த 5-2-2007ல் வழங்கிய இறுதித் தீர்ப்பில் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு, கர்நாடகா 192 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது.

ஆனால் காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக கடந்த நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்தன.
இந்த அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றம் ஏற்கனவே 15 நாட்களுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பலமுறை உத்தரவிட்ட போதும், கர்நகாடகாஅரசு பற்றாக்குறையை காரணம் காட்டி தண்ணீர் திறந்துவிடவில்லை.
இந்நிலையில் பற்றாக்குறை காலத்தில் காவிரி நீரை தமிழகம்,கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பங்கிட்டு கொள்வது குறித்து கருத்து தெரிவிக்குமாறு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு கூறியிருந்தது.
இதன் அடிப்படையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தரமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மதற்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் பசவராஜ், அமைச்சர்கள், எம்.பி.பாட்டீல், பரமேஸ்வர் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் 4 மாநிலங்கள்எவ்வாறு நீரை பகிர்ந்து கொள்வது என்று அரசியல்கட்சியினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. பற்றாக்குறை கால நீரை பகிர்ந்துகொள்வதற்கான குழுவை அமைப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆலோசனைபடி செயல்படுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
-
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன? -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications