கர்நாடக தேர்தலில் பேஸ்புக் மூலம் முறைகேடு நடக்கிறதா? மார்க்கிடம் உறுதிமொழி கேட்ட மத்திய அரசு!
கர்நாடகாவில் நடக்க இருக்கும் தேர்தலில் பேஸ்புக் மூலம் முறைகேடு நடக்கிறதா என்று பாஜக கட்சி விளக்கம் கேட்டு இருக்கிறது.
பெங்களூர்: கர்நாடகாவில் நடக்க இருக்கும் தேர்தலில் பேஸ்புக் மூலம் முறைகேடு நடக்கிறதா என்று பாஜக கட்சி விளக்கம் கேட்டு இருக்கிறது. இதற்காக பேஸ்புக் அமைப்பிடம் மத்திய அரசு உறுதி மொழி கேட்டு உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் நடக்க இருக்கும் தேர்தலில் எந்த விதமான முறைகேடும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்து இருந்தார். கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடிய பிரச்சனை காரணமாக அவர் இப்படி பேசி இருந்தார்.
பிரபல சேனல் 4 தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இது இந்திய தேர்தலிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல்
உலகம் முழுக்க நடந்த பல தேர்தல்களில் பேஸ்புக் முறைகேடு செய்ததாக கூறப்பட்டது. தகவல் திருட்டு மூலம் பேஸ்புக் மக்களின் கருத்துக்களை மாற்றி இருக்கிறது. முக்கியமாக அமெரிக்க தேர்தல், இந்திய நாடாளுமன்ற தேர்தல், பிரிக்சிட் ஆகிய தேர்தல்களில் பேஸ்புக் முறைகேடு செய்ததாக கூறப்பட்டது.

இந்திய தேர்தலிலும்
இந்த நிலையில் இந்திய தேர்தலிலும் பேஸ்புக் முறைகேடு செய்ததாக கூறப்பட்டது. பாஜக கட்சிதான் பேஸ்புக்கின் முக்கியமான வாடிக்கையாளர் என்றும் தகவல் வெளியானது. இதனால் பாஜக கட்சி, தற்போது நடக்க இருக்கும் கர்நாடக தேர்தலிலும் முறைகேடு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

உறுதி அளித்தார்
இதையடுத்து சில நாட்களுக்கு முன் இந்திய தேர்தலில் எந்த விதமான முறைகேடும் நடக்காமல் பார்த்துக் கொள்வோம். வாக்காளர்களின் கருத்துக்களை மாற்றும் எந்த விதமான செயலிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம். இனி வரும் எந்த தேர்தலிலும் இதுபோன்ற மோசடிகளை செய்ய மாட்டோம் என்று குறிப்பிட்டார்.

பாஜக உறுதிமொழி
இந்த நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழுவும், பாஜக கட்சியும் பேஸ்புக்கிடம் உறுதிமொழி வாங்கி இருக்கிறது. அதன்படி பேஸ்புக் தற்போது மத்திய அரசிடம் உறுதிமொழி வாக்குமூலம் அளித்து இருக்கிறது. கர்நாடக தேர்தல் தொடங்கி இந்தியாவில் நடக்கும் எந்த தேர்தலிலும் முறைகேடு செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளது. ஆனாலும் இதில் முறைகேடு நடக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications