கர்நாடகா சட்டசபை தேர்தல்: சாம்ராஜ் நகர் சென்டிமென்ட் பீதி.. எட்டிப்பார்க்காமல் எஸ்கேப்பான மோடி
சாம்ராஜ் நகருக்குள் காலடி வைத்தால் பதவி பறிபோய்விடும் என்கிற சென்டிமென்ட் இசாம்ராஜ் நகருக்குள் காலடி வைத்தால் பதவி பறிபோய்விடும் என்கிற சென்டிமென்ட்க்கு மோடியும் விதி விலக்கு அல்ல.
பெங்களூரு: கர்நாடகா அரசியல் களத்தில் சாம்ராஜ் நகருக்குள் காலடி வைத்தால் பதவி பறிபோய்விடும் என்கிற சென்டிமென்ட் இருக்கிறது. இதனால்தான் பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்தை சாம்ராஜ்நகரில் பாஜகவினர் ஏற்பாடு செய்யவில்லை.
சாம்ராஜ்நகர் நகரத்துக்குள் காலடி வைத்தால் பதவி பறிபோகும் என்பது கர்நாடகா அரசியலின் நீண்டகால நம்பிக்கை. முன்னாள் முதல்வர்கள் தேவராஜ் அர்ஸ், குண்டு ராவ், ராமகிருஷ்ண ஹெக்டே, எஸ்.ஆர். பொம்மை, வீரேந்திர பாட்டீல் மற்றும் குமாரசாமி ஆகியோர் சாம்ராஜ்நகர் பயணங்களுக்குப் பின்னர்தான் பதவியை பறிகொடுத்தனராம். 2007ம் ஆண்டு சாம்ராஜ்நகருக்கு குமாரசாமி சென்று திரும்பிய போதுதான் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கவிழ்ந்தது.

அதேபோல் முன்னாள் முதல்வர்களான பங்காரப்பா, வீரப்ப மொய்லி, தேவ கவுடா, ஜேஎச் படேல், எஸ்.எம். கிருஷ்ணா, தரம்சிங், எதியூரப்பா, சதானந்த கவுடா ஆகியோர் பதவி காலங்களில் சாம்ராஜ்நகர் பக்கம் எட்டிக் கூட பார்த்தது இல்லை. 1998ம் ஆண்டு மைசூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட சாம்ராஜ்நகர் உருவாக்கப்பட்டது. இதற்கான விழாகூட சாம்ராஜ்நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொள்ளேகால் மலையில்தான் நடந்தது. அப்போதைய முதல்வர் ஜே.எச். படேல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஆனால் தற்போதைய முதல்வர் சித்தராமையாவோ இந்த மூடத்தனத்தை உடைக்கும் வகையில் சாம்ராஜ்நகருக்கு பல முறை பயணம் மேற்கொண்டு விட்டார். அப்போதெல்லாம் ஊடகங்களிடம் இந்த மூடநம்பிக்கையை கடுமையாக விமர்சிக்கவும் தயங்கியது இல்லை. சாம்ராஜ் நகருக்கு 11 முறை வந்து சென்றுவிட்டேன்; நான் இன்னமும் பதவியில்தானே நீடிக்கிறேன் என கூறிவந்தார் சித்தராமையா. தமது பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்து பல ஆண்டுகால மூடநம்பிக்கையை தகர்த்தவர் சித்தராமையா.
இருப்பினும் பாஜகவினர் பீதியில்தான் பிரதமர் மோடிக்கு சாம்ராஜ்நகரில் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்யாமல் சந்தேமரஹனள்ளியில் நடத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications