2 வருடங்களுக்கு பிறகு பிரச்சார களத்தில் சோனியா காந்தி.. கர்நாடகாவில் உற்சாக உரை
கர்நாடக மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
Recommended Video
பெங்களூர்: 2 வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் பிரச்சார களத்தில் இறங்கியுள்ளார் சோனியா காந்தி. கர்நாடக மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியா காந்தி இன்று கர்நாடகாவில் பிரச்சாரம் செய்தார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.எல்லா கட்சியில் இருந்தும் முக்கியமான தலைவர்கள் அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கூடி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முக்கியமான தலைவர்கள் எல்லோரும் இப்போது அந்த மாநிலத்தில்தான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது கர்நாடக மாநில தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியா காந்தி பிரச்சாரம் இன்று செய்தார். 2 வருடங்களுக்கு பின் அவர் இப்போதுதான் தேர்தலில் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் அவர் 2016 ஆகஸ்டில் உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவருக்கு திடீர் என்று உடல்நிலை சரியில்லாமல் போனதால் பாதியில் பிரச்சாரம் செய்யாமல் வெளியேறினார். 71 வயது நிரம்பியுள்ள அவர் அதன்பின் பிரச்சாரம் செய்யவில்லை.
குஜராத் தேர்தல், திரிபுரா தேர்தல், உத்தரகான்ட், மணிப்பூர், மத்திய பிரதேசம், நாகலாந்து, பஞ்சாப், கோவா என எந்த தேர்தலிலும் அவர் பிரச்சாரம் செய்யவே இல்லை. இந்த நிலையில்தான் இன்று கர்நாடகாவில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அவர் கர்நாடகாவில் பிஜப்பூர் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.
பிஜப்பூர் தொகுதியில் இன்று மட்டுமே பிரச்சாரம் செய்தார். இனி பிரச்சார செய்ய மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மே 12ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அவரது இந்த பிரச்சாரம் முக்கியத்துவம் பெறுகிறது. முக்கியமாக இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவர் மேலும் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அவரது வருகைக்காக சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இவரது பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாக்குர் உடன் இருந்து கவனித்துக் கொண்டார். அதேபோல் உடன் இருந்து மருத்துவர்கள் அவரை பார்த்துக் கொண்டனர்.