எஸ்மா சட்டத்தை பிறப்பித்தது கர்நாடக அரசு.. போலீசார் போராட்டம் நடத்தினால் டிஸ்மிஸ்
பெங்களூர்: போலீசாரின் வேலைநிறுத்த போராட்டத்தை ஒடுக்க கர்நாடகாவில் எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, அதிகப்படியான பணி நேர உளைச்சலை குறைப்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 4-ல் ஸ்டிரைக்கில் ஈடுபட போலீசார் திட்டமிட்டுள்ளனர். சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிக போலீசார், குறிப்பாக எஸ்.ஐ அளவுக்கு கீழுள்ள காவலர்கள், மொத்தமாக லீவு எடுத்து போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த தகவல் வெளியாகிய நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், போராட்டத்திட்டத்தை கைவிடுமாறு போலீசாருக்கு கோரிக்கைவிடுத்தார். ஆனால் போலீசார் வேலை நிறுத்த முடிவிலிருந்து வாபஸ் ஆகவில்லை.
இந்நிலையில், கர்நாடக அரசு நேற்று நள்ளிரவில், அத்தியாவசிய சேவை பராமரிப்பு சட்டத்தை (எஸ்மா) பிறப்பித்துள்ளது. கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் இருந்து மக்களை காக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இருப்பதால் காவல்துறை இந்த சட்டத்தின்கீழ் கொண்டுவரப்படுவதாக அந்த சுற்றறிக்கையில் அரசு தெரிவித்துள்ளது.
எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தில் ஈடுபடும் போலீசாரை டிஸ்மிஸ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறை இதற்கு எந்த மாதிரியான எதிர்வினையாற்றப்போகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை.












Click it and Unblock the Notifications