ஆட்சியைப் பிடிக்க அவசரம்... உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீண்டும் தூக்கி கடாசுகிறதா பாஜக?
ஆட்சி அமைப்பதில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதிப்பதே இல்லை பாஜக.
டெல்லி: மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் விவகாரங்களில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை ஒவ்வொரு முறையும் தூக்கி வீசுகிறது பாஜக.
கடந்த காலங்களில் நினைத்த நேரத்தில் பிடிக்காத மாநில அரசுகளை மத்திய அரசின் 356-வது பிரிவை பயன்படுத்தி கலைத்துவிட முடியும். ஆனால் கர்நாடகாவில் எஸ்.ஆர். பொம்மை அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்குப் பின் அப்படி எல்லாம் நினைத்த நேரத்தில் மாநில அரசை தூக்கி எறிந்துவிட முடியாது.
பொதுவாக கடந்த 20 ஆண்டுகளில் மாநில அரசுகளைக் கலைப்பது, மாநில உரிமைகளைப் பேசுவது, ஆட்சி அமைக்கும் விவகாரங்களில் எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பு பிரதான ஒன்றாக இருக்கிறது. 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் 1994-ல் இந்த தீர்ப்பை வழங்கியது. இந்த பெஞ்ச்சில் திமுகவின் மாவட்ட செயலாளராக இருந்து பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ரத்தினவேல் பாண்டியனும் ஒருவர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு
அத்தீர்ப்பு ஆட்சி அமைக்கும் விவகாரம் குறித்து குறிப்பிடுகையில், மாநிலங்களில் தொங்கு சட்டசபை ஏற்படுகிறது எனில் அப்போது தேர்தலுக்கு முந்தைய கூட்டணியின் அடிப்படையில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியை அழைக்கலாம் அல்லது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியின் அடிப்படையில் பெரும்பான்மை உள்ள கட்சிகளை அழைக்கலாம்; இல்லையெனில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியை அழைக்கலாம் என்கிறது அத்தீர்ப்பு.

மீண்டும் வலியுறுத்திய உச்சநீதிமன்றம்
2006-ம் ஆண்டு இத்தீர்ப்பு 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சால் மேலும் மெருகேற்றப்படுகிறது. அதில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி ஒன்றும் தவறானது அல்ல. ஒரு அரசியல் கட்சி மற்ற கட்சி அல்லது எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினால் பெரும்பான்மை இருக்கும் நிலையில் அக்கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநர் தயங்கக் கூடாது. ஆளுநர் தமக்கு அதிகாரம் இருக்கிறது என ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரானது. ஆளுநர் ஒன்றும் எதேச்சதிகாரம் படைத்தவரும் அல்ல என்கிறது அத்தீர்ப்பு.

தீர்ப்பை மதிக்காத ஆளுநர்
ஆனால் கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு விரோதமாக, குறைந்த இடங்களைப் பெற்ற பாஜகவைத்தான் அம்மாநில ஆளுநர்கள் அழைத்தனர். இப்போது கர்நாடகாவில் பெரும்பான்மை கொண்ட ஜேடிஎஸ்- காங்கிரஸை அழைக்க ஆளுநர் மறுப்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது.

உச்சநீதிமன்றத்தில் காங். வழக்கு
இதையே மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் சுட்டிக்காட்டுகிறார். மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடவும் காங்கிரஸ் தயாராகி வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications