காவிரி வழக்கு எப்படியானாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும்.. கர்நாடக அமைச்சர் வேண்டுகோள்
பெங்களூர்: கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் இன்று மதியம், தமிழகம்-கர்நாடகா எல்லை பகுதியான அத்திபெலேயில் ஆய்வு மேற்கொண்டார்.
பரமேஷ்வர் அவர் கர்நாடகா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து இன்று பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர் இறுதியாக தமிழக-கர்நாடக எல்லையான அத்திபெலேயில் பாதுகாப்பு பணிகளில் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: கர்நாடகா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லை பகுதியில் கர்நாடக காவல்துறை, கே.எஸ்.ஆர்.பி, துணை ராணுவ படை 6 பிரிவு போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கே.பி.என். பேருந்து எரிக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார் அதற்கு கே.பி.என். பேருந்து எரிப்பு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளன்ர். மேலும் கலவரத்தில் ஈடுபட்ட 600 க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளோம் என தெரிவித்தார்.
கடந்த 12ம் தேதி நடந்த கலவரம் வருத்தம் அளிப்பதாகவும், தெரிவித்தார். மேலும், இன்று உச்சநீதிமன்றத்தில் காவிரி தொடர்பான, தீர்ப்பு வர உள்ளது அதை தொடர்ந்து நாளை முதல்வர் அமைச்சரவையை கூட்டி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் என தெரிவித்தார். கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லாத சூழ்நிலையில், கூடுதலாக தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால், அதுகுறித்து அமைச்சரவை ஆலோசித்து முடிவெடுக்கும். பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு பரமேஷ்வர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications