கர்நாடகா: மனைவியுடன் லீலை.. நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த கணவன் - பரவிய பகீர் வீடியோ
சிக்கபல்லாபூர்: கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் மனைவியுடன் மறைமுகமாக உறவு வைத்திருந்த நண்பனின் கழுத்தை அறுத்து கணவன் ரத்தம் குடித்த பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டம் சிந்தாமணி அருகே பட்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜ்ய. இவரது மனைவி மாலாவுக்கும் நண்பன் மாரேஷுக்கும் மறைமுகமான உறவு இருந்து வந்துள்ளது. இந்த தகாத உறவு விஜய்க்கு தெரிய வர கடும் கோபம் அடைந்துள்ளார். மாலாவையும் மாரேஷையும் விஜய் கண்டித்தும் இருவரும் தங்களது தகாத உறவை கைவிடவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மாரேஷுக்கு பாடம் கற்றுத் தர நினைத்த விஜய் தமது மற்றொரு நண்பர் ஜான் உதவியுடன் மாரேஷை வனப்பகுதி ஒன்றுக்கு அழைத்து சென்றார். அங்கு மாரேஷை நன்கு மது குடிக்க வைத்துள்ளனர். பின்னர் மாரேஷின் கழுத்தை அறுத்து ரத்தத்தை விஜய் குடித்துள்ளார். மாரேஷின் கழுத்தை அறுத்து ரத்தத்தை விஜய் குடிக்கும் காட்சியை ஜான் செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். பின்னர் மாரேஷை வனப்பகுதியிலேயே விட்டுவிட்டு விஜய், ஜான் வீடு திரும்பினர்.

இதனிடையே வனப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் மிதந்த மாரேஷ், அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாரேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாரேஷ் அளித்த புகாரின் பேரில் விஜய் கைது செய்யப்பட்டுள்ளார். மாரேஷின் கழுத்தை அறுத்து விஜய் ரத்தம் குடிக்கும் வீடியோவை ஜான் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இப்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications