காவிரி போராட்டங்களால் கர்நாடகாவுக்கு ரூ.40,000 கோடி நஷ்டம்: மேலவையில் பாஜக உறுப்பினர் சீற்றம்
பெங்களூர்: காவிரி நதியிலிருந்து கூடுதல் நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 20ம் தேதி தீர்ப்பளித்தது.
இதனால் கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக இரு அவைகளின் கூட்டு கூட்டத்தை இன்று கூட்டியது கர்நாடக அரசு.

மேலவையில், எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா (பாஜக) பேசியது: காவிரி பிரச்சினைகள் பலவற்றை நான் பார்த்துள்ளேன். ஆனால் இம்முறை கர்நாடக மக்கள் தற்கொலை செய்து கொண்டதை போன்ற போராட்டத்தை முன்னெடுத்தனர். பஸ் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் மூலம், கர்நாடகாவுக்கு குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் கோடி நஷ்டமாகியுள்ளது.

நமது சொத்தை நாமே நாசம் செய்துள்ளோம். தண்ணீருக்காக இந்த அளவுக்கு போராடியுள்ளோம். அப்படியும் மனிதாபிமான அடிப்படையில் கூட தமிழகம் நமது கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.

தெருவில் போகும் சாமானியரிடம் போய், குடிக்க தண்ணீர் இல்லாத போது பக்கத்து மாநில விவசாயத்திற்கு தண்ணீர் விட வேண்டுமா என்று கேட்டால் அவன் சிரிப்பான். சுப்ரீம் கோர்ட், வக்கீல் வாதம் என்பதெல்லாம் யாருக்கும் புரியாது. குடிக்க தண்ணீர் முக்கியம் என்பது மட்டுமே வாதம்.
கர்நாடக அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும், பாஜக ஒத்துழைக்கும். இவ்வாறு ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications