கர்நாடகாவில் முன்னாள் அமைச்சர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை !
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: கர்நாடக மாநில தொழிலாளர் துறை முன்னாள் அமைச்சர் குருநாத் பெங்களூர் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 1994 முதல் 1996 வரை முதல்வராக பதவி வகித்தார் தேவகவுடா. அப்போது மாநில அமைச்சரவையில் தொழிலாளர் துறை அமைச்சராக பதவி வகித்தவர் குருநாத்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெங்களூர் திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில்
நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த குருநாத், மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications