காவிரி விசாரணை: சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடகா அமைச்சர் பாட்டீல்... எட்டிப் பார்க்காத தமிழக அமைச்சர்கள்
டெல்லி: காவிரி நதிநீர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீலும் கலந்து கொண்டார். ஆனால் தமிழக அமைச்சர்கள் எவருமே இந்த உச்சநீதிமன்ற விசாரணையை எட்டிகூட பார்க்கவில்லை.
50 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் முதலில் 15,000 கன அடி நீரையும் பின்னர் 12,000 கன அடி நீரையும் செப்டம்பர் 20-ந் தேதி வரை திறந்துவிட உத்தரவிட்டது.

ஆனால் கர்நாடகாவோ செப்டம்பர் 18-ந் தேதி இரவே தமிழகத்துக்கான நீர் திறப்பை நிறுத்திவிட்டது. இதனிடையே காவிரி மேற்பார்வைக் குழுவும் தமிழகத்துக்கு நாளை முதல் 3,000 கன அடி நீரை 10 நாட்களுக்கு திறந்துவிட உத்தரவிட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கலந்து கொண்டார்.
உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணை நடைபெறும் போதெல்லாம் கர்நாடகா அரசு கவனம் செலுத்தி அமைச்சரைக் கூட அனுப்பி வைக்கிறது. ஆனால் நீரைப் பெற்றுத்தரவேண்டிய நிலையில் இருக்கும் தமிழக அரசோ எந்த ஒரு அமைச்சரையும் அனுப்புவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications