தென்பெண்ணை-பாலாறு நதிநீர் இணைப்புக்கும் கர்நாடகா எதிர்ப்பு: உமா பாரதி முன்னிலையில் திட்டவட்டம்
டெல்லி: டெல்லியில் நடந்த கூட்டத்தில், தென்பெண்ணை-பாலாறு நதிநீர் இணைப்புக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் 6வது நதிநீர் இணைப்புக்கான சிறப்பு குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஹரியானா, பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கார், அசாம் ஆகிய மாநிலங்களில் இருந்து சம்பந்தப்பட்ட துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நதிநீர் இணைப்பு திட்டத்துக்கான வரைவுகள் குறித்து கருத்து பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் கலந்து கொண்ட கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், தென்பெண்ணை-பாலாறு நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
‘‘தென்பெண்ணையாறு பெங்களூரு நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஆற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீரை நம்பியே பெங்களூரு நகரம் உள்ளது. தென்பெண்ணை நதியில் இருந்து கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம் அதிக அளவிலான பயனைப் பெறுகிறது. எனவே இந்த நதியின் மூலம் தமிழகம் அதிக பயன் அடைகிறது. எனவே தென்பெண்ணை-பாலாறு நதிநீர் இணைப்பு திட்டம் கர்நாடக மாநிலத்தின் நலனை பெரிதும் பாதிக்கும் வகையில் அமையும் என்பதால் இந்த நதிகளை இணைக்கக்கூடாது'' என்று பாட்டீல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications