கடும் மின்வெட்டு... தமிழகத்திடம் இருந்து மின்சாரம் வாங்க போகிறதாம் கர்நாடகம்!!
பெங்களூர்: கர்நாடகாவின் கடுமையான மின்பற்றாக்குறையை சமாளிக்க தமிழகத்திடம் இருந்து மின்சாரத்தை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

கர்நாடகாவில் கடுமையான மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் 4 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பிற பகுதிகளில் 6 முதல் 8 மணிநேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. கர்நாடகா முழுவதும் சாலை விளக்குகள் மூலம் வீணாகும் ஆகும் மின்சாரத்தை கட்டுப்படுத்தி 800 முதல் 1,000 மெகாவாட் வரையிலான மின்சாரத்தை சேமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் இருந்தும் மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த மாநில மின்சாரத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு சென்றும் பேச்சுவார்த்தை நடத்துமாறு முதல்வர் எனக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மின்சாரத்தை சேமிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவின் போது சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications