சுப்ரீம் கோர்ட்டுக்கு கணக்கு காட்ட, பாசனத்திற்கு நீர் திறக்க ஆரம்பித்தது கர்நாடகா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரி நீர் பிடிப்பு அணைகளிலிருந்து பாசன வசதிக்காக கர்நாடகா தண்ணீர் திறக்க ஆரம்பித்துள்ளது.

கர்நாடகாவில் காவிரி தண்ணீரை சேகரித்து வைத்துள்ள நான்கு அணைகளில் மொத்தம் 27 டிஎம்சி தண்ணீரை குடிநீர் தேவைக்கு பயன்படுத்தவும், பிற தண்ணீரை பாசன தேவைக்கு திறந்துவிடவும் கர்நாடக சட்டசபை ஒரு மனதாக நேற்று தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து பெயரளவில் தண்ணீரை திறந்துவிட ஆரம்பித்துள்ளது கர்நாடகா.

Karnataka started the release of 6,800 cusecs of water from the KRS

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நேற்று இரவே 6,856 கனஅடி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டது. இதில்து 4000 கனஅடி நீர் தமிழகத்துக்கும், எஞ்சிய தண்ணீர் கால்வாய்கள் வழியாக கர்நாடக பாசனத்திற்கும் பயன்பட உள்ளது. கபினி அணையிலிருந்து 3500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாம்.

திடீர் மழை காரணமாக, காவிரி அணைகளில் தற்போது 34 டிஎம்சி தண்ணீர் உள்ளது. எனவே பெரிய மனசு வைத்து எஞ்சிய தண்ணீரை திறக்கிறது கர்நாடகா. இதன்மூலம் இன்று விசாரணைக்கு வரும் காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற பிடியிலிருந்து தப்பிக்கலாம் என்பது கர்நாடக கணக்கு. ஆனால் தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் வரப்போவதில்லை என்பது உறுதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+