ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் 3 தமிழர்கள்.. கர்நாடக இளைஞர்கள் முன்னிலை: உளவுத்துறை
பெங்களூர்: இந்தியாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு, கர்நாடகாவில் இருந்துதான் அதிகமாக ஆட்கள் சென்று சேருவது தெரியவந்துள்ளது. அதேநேரம், தமிழகத்தை சேர்ந்த 3 பேர் இப்போதும் தீவிரவாத அந்த தீவிரவாத அமைப்பில் செயல்பட்டுவருவதும் அம்பலமாகியுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு, ஆட்களை தேர்ந்தெடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளவர்களில் முக்கியமானவர், சுல்தான் ஆர்மர். அன்சர்-உல்-தவ்ஹித் என்ற இயக்கத்தை நிறுவியதும் இவரே.
ஆர்மரின் சொந்த ஊர், கர்நாடக மாநிலம் பத்கல். இந்த நகரில் இருந்துதான் ஏகப்பட்ட தீவிரவாதிகள் உருவாகியுள்ளனர் என்கிறது காவல்துறை மற்றும் உளவுத்துறை ஆவணங்கள்.

முக்கிய புள்ளி சாவு
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும், அரசு படைகளுக்கும் சமீபத்தில் நடைபெற்ற சண்டையில் ஆர்மர் கொல்லப்பட்டதாக சமூக தளங்களில் தகவல் பரவியது.

ஆறு இந்தியர்கள்
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்த, இந்தியர்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, இந்திய அசு அறிவித்துள்ளது. இவர்கள் சிரியா மற்றும் ஈராக்கில் உயிரிழந்தனர்.

பெயர் விவரம்
இந்நிலையில், இன்று இந்திய அரசு வெளியிட்ட தகவலில், கொல்லப்பட்ட இந்தியர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த, அத்தீப் வசீம் முகமது, பெங்களூர் சிவாஜிநகரை சேர்ந்த முகமது உமர் சுபான், பத்கலை சேர்ந்த மவுலானா அப்துல் கபீர் சுல்தான் ஆர்மர், மகாராஷ்டிராவின் தானே பகுதியை சேர்ந்த ஷகீம் ஃபரூக், பெங்களூரை சேர்ந்த பைஸ் மசூத், உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகமது சஜித் ஆகியோர் உயிரிழந்தவர்கள்.

தமிழகத்திலிருந்து 3 பேர்
மத்திய உள்துறை அமைச்ககம் தயாரித்துள்ள பட்டியல்படி, இந்தியாவை சேர்ந்த 23 பேர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் உள்ளனர். அதில் 5 பேர் கர்நாடகாவையும், 3 பேர் தமிழகத்தையும் சேர்ந்தவர்கள். கேரளா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் தலா 4 பேர் உள்ளனர்.

சகோதரர் பொறுப்பு
சுல்தான் ஆர்மர் உயிரிழந்தது உறுதியாகியுள்ள நிலையில், அவரது சகோதரர் ஷாபி ஆர்மரின் நடவடிக்கையை உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஏனெனில் ஆர்மர் இறந்ததை தொடர்ந்து ஷாபிதான், இந்தியாவில் இருந்து ஆள்பிடிக்கும் வேலையை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications