தமிழகத்தில் மழை பெய்கிறது...காவிரி நீரை தர முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா 'பிடிவாத' மனு
டெல்லி: தமிழகத்தில் மழை பெய்துவருவதால் காவிரி நீரை திறந்துவிட முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா தாக்கல் செய்த மனுவில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்துவிட கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அதில் காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின்படி தமிழகத்துக்கு திறந்துவிடப்பட வேண்டிய 45 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட வலியுறுத்தப்பட்டிருந்தது.

தமிழக அரசு மனு மீது கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று பதில் மனுவைத் தாக்கல் செய்தது. அம்மனுவில், காவிரி மேற்பார்வைக்குழுவின் 28.9.2015 கூட்டத்தில் இரு மாநிலங்களின் மழைநீர் அளவு, தேக்கி வைக்கப்பட்ட நீரின் அளவு குறித்து ஆய்வு செய்ய துணைக்குழு அமைக்கப்பட்டது.
கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது வறட்சி நிலவி வருகிறது. ஆகையால் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாத நிலைமை உள்ளது. தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
ஆகையால் கர்நாடகாவின் தேவைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழகத்துக்கு காவிரி நீரை திறப்பது குறித்து பரிசீலிப்போம். ஆகையால் தமிழகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications