காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா- பாக். இடையே 4வது யுத்தம்: நவாஸ் ஷெரீப்
முசாபர்பாத்: காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே 4வது யுத்தத்துக்கு வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரான "ஆசாத் ஜம்மு காஷ்மீரின்" பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்று நவாஸ் ஷெரீப் பேசியதாவது:
காஷ்மீர் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபை உட்பட அத்தனை சர்வதேச தளங்களிலும் நாம் எழுப்பிக் கொண்டிருக்கிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்குட்பட்டு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணாத வரை அமைதி நிலவப் போவதில்லை.
காஷ்மீரை மையமாக வைத்துத்தான் அணுஆயுத நாடுளான இந்தியா- பாகிஸ்தான் இடையே 4வது யுத்தம் நடைபெறக் கூடும். அதனால் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அண்மையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பேசும்போது கூட காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினேன்.

என்னைப் பொறுத்தவரை நாட்டின் இதர பகுதிகளைவிட காஷ்மீர்தான் எனக்கு மிகவும் முக்கியமானது. காஷ்மீரத்தின் வளர்ச்சிதான் எனது தேசியக் கடமை. இந்த பிராந்தியத்தின் அனைத்து வளர்ச்சிக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம்.
காஷ்மீரின் சுயநிர்ணய உரிமைக்காக போராடி உயிர்நீத்த அனைவருக்கும் எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீர மக்களுடன் எப்போதும் பாகிஸ்தான் அரசும் பாகிஸ்தான் மக்களும் துணை நிற்பார்கள் என்றார்.
காஷ்மீர் விடுதலை பற்றி பேசினாரா?
இதனிடையே தமது வாழ்நாள் கனவே காஷ்மீர விடுதலைதான் என்று நவாஸ் ஷெரீப் பேசியதாக சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. இருப்பினும் நவாஸ் ஷெரீப் அலுவலக செய்திக் குறிப்பில் அத்தகைய வாசகங்கள் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications