யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கு எதிர்ப்பு - போராட்டம் நடத்திய காஷ்மீர் எம்.எல்.ஏ கைது
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கு போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர் அருகே லால் சவுக் பகுதியில் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனை துாக்கிலிட்டதற்கு கண்டனம் தெரிவித்து காஷ்மீர் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ ஷேக் அப்துல் ரஷித் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார்.

மரண தண்டனையை உலகிலிருந்து ஒழிக்க வேண்டும் என கோஷம் எழுப்பிய இவர், மத்திய அரசுக்கெதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்.
அதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் அசம்பாவிதங்களைத் தடுக்க இவரை கைது செய்து கோதிபாக் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications