காஷ்மீர் உள்நாட்டு விவகாரம் அல்ல.. சர்வதேச பிரச்சனை: சையத் கிலானி பேச்சால் சர்ச்சை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜம்மு காஷ்மீர் சிக்கல் உள்நாட்டு பிரச்சனை அல்ல.. சர்வதேச விவகார்ம என்று ஹூரியத் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான சையத் அலி கிலானி கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்த இருந்தனர். இதையொட்டி ஆலோசனை நடத்த காஷ்மீர் விடுதலை இயக்கத் தலைவர்களை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அழைத்திருந்தார்.
ஆனால் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் வெளியுறவுச் செயலர்களின் பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்தது. இந்நிலையில் டெல்லியில் கிலானி உள்ளிட்ட ஹூரியத் மாநாட்டு கட்சித் தலைவர்கள் பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித்தை இன்று சந்தித்து பேசினர்.
முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கிலானி கூறியதாவது:
- ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை உள்நாட்டு விவகாரம் என்பது உண்மைக்கு எதிரானது.
- ஜம்மு காஷ்மீர் பிரச்சனை என்பது ஒரு சர்வதேச விவகாரம். இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.
- காஷ்மீரத்து மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் இத்தனை ஆண்டுகாலமாகியும் நிறைவேற்றப்படவில்லை.
- ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க இந்தியா விரும்பவில்லை.
- எங்களை ஒடுக்குவதற்கு ராணுவத்தை இந்தியா பயன்படுத்துகிறது.
- பாகிஸ்தான் வெளியுறவுச் செயலருடனான பேச்சுவார்த்தைய இந்தியா ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது.












Click it and Unblock the Notifications