கேள்வி கேட்டால்... "நன்றி வணக்கம்" - பிரஸ்மீட்டில் இருந்து எஸ்கேப்பான மெகபூபா
ஸ்ரீநகர்: "காஷ்மீரில் நடைபெற்று வரும் கலவரத்தில் உங்கள் பங்கு என்ன?" என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டதால் காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா கோபமடைந்தார். தொடர் கேள்விகளால் பிரஸ் மீட்டை பாதியில் முடித்துக் கொண்டு மெகபூபா வெளியேறியதால் செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
காஷ்மீரில் நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்தும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றார். காஷ்மீரில் பல்வேறு தரப்பினரோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபாவை சந்தித்தார். பின்னர் அவர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது மாநிலத்தில் நிலவி வரும் கலவர சம்பவங்களில் உங்களது பங்கு என்ன என்று செய்தியாளர் ஒருவர் முதலமைச்சர் மெகபூபாவிடம் கேட்டதற்கு அவர் மிகவும் கோபமடைந்தார். வன்முறையில் உயிரிழந்தவர்களில் 95 சதவீதம் பேர் இளைஞர்கள். இவர்கள் அனைவரும் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில்தான் கொல்லப்பட்டனர். ராணுவ முகாம்களுக்கு சிறுவர்கள் மிட்டாய் வாங்கவா சென்றார்கள்? போலீஸ் நிலையத்தை தாக்கிய 15 வயது சிறுவன் அங்கு பால் வாங்கவா சென்றான் என்று கோபத்துடனேயே, பதில் அளித்தார் மெகபூபா.
காஷ்மீர் விவகாரத்தை கையாளுவதில் உங்கள் பங்கு என்ன என்று நிருபர் ஒருவர் மீண்டும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதலமைச்சர் மெகபூபா, காஷ்மீர் இளைஞர்களை போலீஸ் அதிரடிப்படையினரிடம் இருந்து காப்பாற்றினேன். கொத்தடிமைகளாக இருந்த அவர்களை கத்தியில் இருந்து மீட்டெடுத்தேன் என்றார். ஆவேசமாக பேசிய மெகபூபாவை ராஜ்நாத் சிங் சமாதானப்படுத்த முயன்றார்.
என்றாலும் தொடர்ந்து பேசிய மெகபூபா, உலகின் எந்த பகுதியிலும் வன்முறைக்கு இடமில்லை என்றும் எந்த பிரச்சனையையும் ஊக்குவிக்க வேண்டுமென்றால் நீங்களும் வன்முறையை நாடுங்கள் நன்றி என்றும் சொல்லியவாறே சட்டென இருக்கையில் இருந்து எழுந்து சென்றுவிட்டார் மெகபூபா. இதனால் செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications