இந்திய ராணுவத்தில் சேர அதிக அளவில் ஆர்வம் காட்டும் காஷ்மீர் இளைஞர்கள் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: போராட்டத்தில் ஈடுபட காஷ்மீர் மாநில பிரிவினைவாதிகள் தூண்டி வரும் நிலையில், காஷ்மீர் இளைஞர்கள் சுமார் 2200 பேர் ராணுவத்தில் சேர ஆயத்தமாகி வருகின்றனர்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தலைவராகயிருந்த புர்கான் வானி கொல்லப்பட்டதை எதிர்த்து காஷ்மீரில் பெரிய வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 80க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்நிலையில் தெற்கு காஷ்மீரில் புதன்கிழமை நடந்த ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் முகாமில் காஷ்மீரை சேர்ந்த 2200 இளைஞர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட காஷ்மீர் மாநில பிரிவினைவாதிகள் தூண்டி வரும் நிலையில் ராணுவத்தில் சேர காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications