சீமாந்திராவில் சேரும் 7 மண்டலங்கள்... எதிர்ப்பு தெரிவித்து நாளை தெலுங்கானா பந்த்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சீமாந்திராவில் உள்ள கம்மம் மாவட்டத்தில் 7 மண்டலங்களை இணைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தெலுங்கானாவில் பந்த் நடத்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் கே.சந்திரசகேர ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

போலாவரம் திட்டத்தின் கீழ் இந்த 7 மண்டலங்களை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சட்டத் திருத்தமும் கொண்டு வரப்படுகிறது. இதற்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கோதாவரி ஆற்றில் போலாவரம் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு வசதியாக இந்த 7 மண்டலங்களை சீமாந்திராவில் இடம் பெற்றுள்ள கம்மம் மாவட்டத்தில் இணைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

ஆனால் இதற்கு தெலுங்கானா பகுதியில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதையடுத்தே நாளை பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளார் ராவ்.

ஜூன் மாதம் முதல் தெலுங்கானா புதிய மாநிலம் செயல்பாட்டுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+