ஹைடெக்கான தெலுங்கானா முதல்வர்.. சட்டசபைக்குள் திரைகட்டி பவர் பாயிண்ட், ஸ்லைட் ஷோ
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், ஹைடெக்காக மாறிவிட்டார். மாநில சட்டசபையில், பவர் பாயிண்ட் தொழில்நுட்பம் மூலம், நீர்ப்பாசன திட்டம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் கொடுக்கப்போகிறார்.
பன்னாட்டு தொழில்நிறுவனங்களிலும், ஐடி நிறுவனங்களிலும் பவர் பாயிண்ட் என்ற திட்ட விளக்க தொழில்நுட்பம் ரொம்ப பிரபலம். பார்வையாளர்கள் முன்பு, திரையில் திட்டங்களை கொண்டு வந்து காட்டுவதால், எளிதில் புரிய வாய்ப்பு உள்ளது.

சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக, புதிதாக அமைந்துள்ள தெலுங்கானா மாநில சட்டசபை இதுபோன்ற பவர் பாயிண்ட் பிரசன்டேசனை விரைவில் பார்க்க உள்ளது.
நீர்ப்பாசன திட்டங்கள் சிலவற்றை சந்திரசேகரராவ் மாற்ற உள்ளதை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ள நிலையில், அவர்களுக்கு திட்டத்தை எளிதில் புரிய வைப்பதற்காக சட்டசபைக்குள் திரைகட்டி பவர் பாயிண்ட் மற்றும் ஸ்லைட் ஷோ மூலம் விளக்க உள்ளார் சந்திரசேகரராவ். இணையத்தின் மூலம், கூகுள் எர்த் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, இதில் விளக்கம் அளிக்க உள்ளாராம்.
விரைவில் கூட உள்ள பேரவை கூட்டத்தொடரில் இது அமலுக்கு வருகிறதாம்.












Click it and Unblock the Notifications