அவதூறு வழக்கால் அச்சம்.. ஜெட்லியிடம் வருத்தம் தெரிவித்த கெஜ்ரிவால்
அவதூறு வழக்குகளில் ஒவ்வொருவரிடமாக மன்னிப்பு கேட்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவால், அருண் ஜெட்லியிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
டெல்லி: கேப்டன் விஜயகாந்துக்கு பிடிக்காத ஒரு விஷயம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஒவ்வொரு தலைவராக தேடிச்சென்று, அவதூறு வழக்குகளை வாபஸ் பெறும்படி மன்னிப்பு கேட்டு வருகிறார். அவருடைய டைரி இதற்கான அப்பாயின்ட்மென்ட்களால் நிரம்பி வருகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன், மிகவும் தைரியமான, நேர்மையான, ஐஆர்எஸ் அதிகாரி என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறியப்பட்டார். அரசியலில் குதித்து, டெல்லி முதல்வரானப் பிறகுதான், ஒருநாள் முதல்வர் அர்ஜூன் மாதிரி, ஏன் சார் இவங்க இப்படி பண்றாங்க என்று கேட்கத் துவங்கினார்.

ஆனால், சமாளித்து பிரதமர் மோடி முதல் பலருக்கு சரியான சவால் கொடுத்து வந்தார். மிகவும் துடிப்பான அரசியல்வாதியாக அவர் பார்க்கப்பட்டார்.
2018 துவங்குவதற்கு முன் யாரிடம் ஜோசியம் பார்த்தார் என்று தெரியவில்லை. வரிசையாக யார் யாரை எதிர்த்து கருத்து தெரிவித்து அவதூறு வழக்குகளை சந்தித்தாரோ அவர்களிடம் மன்னிப்பு கேட்டு வருகிறார்.
அந்த வரிசையில், ரூ.10 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதை ஜெட்லி ஏற்றுக் கொள்ள, வழக்கை முடித்துக் கொள்வதாக டெல்லி கோர்ட்டில் இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மன்னிப்பு என்னுடைய அகராதியில் பிடிக்காத வார்த்தை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு படத்தில் சொல்வார். ஆனால், அதை தினமும் சொல்லாவிட்டால், கெஜ்ரிவாலுக்கு தூக்கம் வராது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications