அடடே.. கெஜ்ரிவால்ஜிக்கு கோவம் வந்துருச்சே...''ஆட்சிக்கு வந்தால் மீடியாக்களை லாக்கப்பில் அடைப்போம்''!
டெல்லி: ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்களை லாக்கப்பில் அடைத்து விடுவோம் என அக்கட்சித் தலைவர் கூறியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்த போது காவல் துறையினர் மீது இருந்த கோபம் தற்போது ஊடகங்கள் மீதும் திரும்பியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று நாக்பூரில் நடந்த விருந்தில் கலந்து கொண்ட கெஜ்ரிவால், அது வெளிப்படும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, ‘மீடியாக்கள் பாரதீய ஜனதா கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் விலை போய்விட்டது எனவும் எங்களுக்கு புறம்பான செய்திகளை மீடியாக்கள் வெளியிட்டுவருகிறது இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் எனவும் அவர் அந்த விருந்து நிகழ்ச்சியில் கூறியதாக தெரிகிறது.
மேலும், ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்ட மீடியாக்களை லாக்கப்பில் அடைத்து விடுவோம் என கெஜ்ரிவால் கோபத்துடன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இது தொடர்பாக கருத்துப் பெற செய்தியாளர்கள் கெஜ்ரிவாலைத் தொடர்பு கொண்ட போது, ‘தான் அவ்வாறு எதுவும் கூறவில்லை' என அவர் மறுத்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications