ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கிறது கேரள காங். அரசு!
திருவனந்தபுரம்: ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக கேரள காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.
கன்னூர் மாவட்ட ஆர்எஸ்எஸ் நிர்வாகியாக பணியாற்றியவர் மனோஜ். கடந்த 1ம்தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதே நாளில் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா கேரள தலைநகர் திருவனந்தபுரத்திற்கு வந்திருந்த நிலையில் இக்கொலை நடந்தது.
இதையடுத்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கேரளாவில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. தொடர்ந்து இந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கொலைகள் கேரளாவில் நடப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தொலைபேசி மூலம் கேரள முதல்வர் உம்மன் சாண்டியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா "ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெரும் சதி அடங்கியுள்ளதாக கேரள டிஜிபி என்னிடம் அறிக்கை அளித்துள்ளார். எனவே விசாரணை வரம்பு அதிகம் என்பதை கணக்கில் கொண்டு, இந்த கொலை வழக்கை சிபிஐயிடம் அளிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும்" என்றார்.
பொதுவாக மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி அரசு இருந்தால் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு மாநில அரசுகள் பரிந்துரைக்கும். அல்லது சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைப்பதை மாநில அரசுகள் தவிர்த்துவிடும். ஆனால், கேரளாவில் காங்கிரஸ் கட்சியும், மத்தியில் பாஜகவும் ஆட்சியில் உள்ள போதிலும் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கேரளா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications