கேரளாவிலும் ஒரே கட்டமாக மே 16-ல் சட்டசபை தேர்தல்; மே 19- வாக்கு எண்ணிக்கை
திருவனந்தபுரம்: தமிழகம், புதுவையுடன் கேரளாவிலும் ஒரே கட்டமாக மே 16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும்; மே 19-ந் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.

அஸ்ஸாமில் 2 கட்டங்களாகவும் மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 16-ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
LIVE: Here is the schedule of #AssemblyElections in Tamil Nadu, Kerala and Puducherry pic.twitter.com/esaNR5XwS2
— PIB India (@PIB_India) March 4, 2016
கேரளா மாநில தேர்தல் அட்டவணை விவரம்:
ஏப்ரல் 22- வேட்புமனுக்கள் தாக்கல் தொடக்கம்
ஏப்ரல் 29- வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்
ஏப்ரல் 30- வேட்புமனுக்கள் பரிசீலனை
மே 2- வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்
மே 16- ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல்
மே 19- வாக்கு எண்ணிக்கை












Click it and Unblock the Notifications