பன்முகத் தன்மை கொண்ட கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள் - பினராயி விஜயன்
திருவனந்தபுரம்: செவாலியே விருது பெறும் நடிகர் கமல்ஹாசனுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் மிகஉயரிய விருதான செவாலியே விருது 1957 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளை சேர்ந்த மனிதர்களை பெருமைப்படுத்தும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

தற்போது கமல்ஹாசனுக்கு செவாலியே விருது வழங்கப்படுவதாக பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை அறிவித்துள்ளது. சிறந்த நடிப்பாற்றலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த 1997ம் ஆண்டு மறைந்த நடிகர் சிவாஜிகணேன் இந்த விருது பெற்றார். தற்போது அவரது கலையுலக வாரிசாகக் கருதப்படும் கமலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது
இந்த விருது பெறும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், கமல் ஒரு பன்முகத் தன்மைக் கொண்ட ஒரு நடிகர். ஒரு நடிகனின் பணிவு அவரின் நடிப்பில் தெரியும். தசாவதாரம் எடுத்த கமலுக்கு இந்த உயரிய விருது கிடைத்ததற்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications