டெல்லி பல்கலைக்கழகத்தில் மொழி பாகுபாடு.. மோடிக்கு கேரள முதல்வர் கடிதம்! என்ன செய்கிறார் எடப்பாடி?
டெல்லி பல்கலைக்கழகத்தின் மொழி பாகுபாடு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
திருவனந்தபுரம்: டெல்லி பல்கலைக்கழகத்தின் மொழி பாகுபாடு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மொழி பாகுபாடு அரசியலமைப்பின் விதிமீறல் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் தமிழ், கன்னடா, மலையாளம், ஒரியா, நேப்பாளி உள்ளிட்ட மொழிகள் பாடத்திட்டத்தில் இல்லை என அறிவித்துள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மொழி பாகுபாட்டால் மாணவர்கள் கல்வியில் சோபிக்க முடியாத நிலை ஏற்படும் என சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடி மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அரசியலமைப்பின் மீறல்
அதில் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் மொழிகளுக்கு எதிரான பாகுபாடு அரசியலமைப்பின் மீறல் என தெரிவித்துள்ளார். மேலும் மொழி பாகுபாடு காரணமாக கேரளாவில் இருந்து பல மாணவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மொழிகள் பட்டியலிடப்பட வேண்டும்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் பட்டியலிடப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் கல்லூரி தீன் தேவேஷ் சின்கா அதுபோன்ற கடிதம் எதுவும் என கிடைக்கவில்லை என கூறியுள்ளார். கடிதம் வந்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பல முறை கடிதம்
15 ஆண்டுகளுக்கு முன்பு நான் டெல்லி பல்கலைக்கழகத்துக்கு வந்த போது இந்த மொழிகளை மேம்படுத்தக்கோரி பலமுறை கடிதம் எழுதியிருப்பதாக கூறியுள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை என்றும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

என்ன செய்கிறார் எடப்பாடி?
மலையாள மொழிக்காக கேரள முதல்வர் பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த விவகாரம் குறித்து இதுவரை வாய்திறக்காமல் உள்ளார். தமிழக மாணவர்கள் குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்து தனது பதவியை காப்பாற்றிக்கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளார்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications