மாணவிகள் பக்கத்தில் உட்கார்ந்ததால் மாணவர் சஸ்பெண்ட் - சர்ச்சையில் சிக்கிய கேரள கல்லூரி
கோழிக்கோடு: கேரளாவில் உள்ள பிரபல கல்லூரியில் மாணவிகளின் அருகே மாணவர் ஒருவர் அமர்ந்ததால் கல்லூரி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ளது இந்த பிரபல தனியார் கல்லூரி. இந்த கல்லூரியில் பி.ஏ.படிக்கும் மாணவர் டினு, இவருடன் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். கடந்த 29 ஆம் தேதி டினுவின் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் மாணவிகளுக்கு அருகே அமர்வது என்று முடிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து அன்று காலை வகுப்பு தொடங்கியது. அப்போது மாணவர்கள் அனைவரும் மாணவிகள் அருகே அமர்ந்து இருந்தனர். இதனை பார்த்த கல்லூரி பேராசிரியர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.உடனே கல்லூரி நிர்வாகித்தனர் டினு மற்றும் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகளை எச்சரித்தனர். மேலும் கல்லூரியில் இது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால் மட்டுமே வகுப்புக்கு அனுமதிப்போம் என்றும் கூறினர்.
மாணவ-மாணவிகள் 10 பேர் நிர்வாகத்திடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தனர். கடிதம் கொடுத்த மாணவ மாணவிகள் மட்டும் வகுப்பிற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மாணவர் டினு, மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க மறுத்துவிட்டார் .படிக்கும் இடத்தில் சேர்ந்து இருப்பதை நான் தவறாக நினைக்கவில்லை. எனவே மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்கமாட்டேன் என்று கல்லூரி நிர்வாகத்திடம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் அவரை கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. இந்த தகவல் வெளியே கசிந்ததை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
மோடி திறந்து வைத்த சாலையை.. தனியாக திறந்து வைத்த கேரள அமைச்சர்! ஒரு ரோடும் தேர்தல் படுத்தும் பாடும் -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications