மாணவிகள் பக்கத்தில் உட்கார்ந்ததால் மாணவர் சஸ்பெண்ட் - சர்ச்சையில் சிக்கிய கேரள கல்லூரி
கோழிக்கோடு: கேரளாவில் உள்ள பிரபல கல்லூரியில் மாணவிகளின் அருகே மாணவர் ஒருவர் அமர்ந்ததால் கல்லூரி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ளது இந்த பிரபல தனியார் கல்லூரி. இந்த கல்லூரியில் பி.ஏ.படிக்கும் மாணவர் டினு, இவருடன் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். கடந்த 29 ஆம் தேதி டினுவின் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் மாணவிகளுக்கு அருகே அமர்வது என்று முடிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து அன்று காலை வகுப்பு தொடங்கியது. அப்போது மாணவர்கள் அனைவரும் மாணவிகள் அருகே அமர்ந்து இருந்தனர். இதனை பார்த்த கல்லூரி பேராசிரியர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.உடனே கல்லூரி நிர்வாகித்தனர் டினு மற்றும் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகளை எச்சரித்தனர். மேலும் கல்லூரியில் இது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால் மட்டுமே வகுப்புக்கு அனுமதிப்போம் என்றும் கூறினர்.
மாணவ-மாணவிகள் 10 பேர் நிர்வாகத்திடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தனர். கடிதம் கொடுத்த மாணவ மாணவிகள் மட்டும் வகுப்பிற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மாணவர் டினு, மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க மறுத்துவிட்டார் .படிக்கும் இடத்தில் சேர்ந்து இருப்பதை நான் தவறாக நினைக்கவில்லை. எனவே மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்கமாட்டேன் என்று கல்லூரி நிர்வாகத்திடம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் அவரை கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. இந்த தகவல் வெளியே கசிந்ததை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications