பத்மநாப சாமி கோயில் நகைகளை தொட விடமாட்டோம்..கேரள முதல்வர் உம்மன் சாண்டி அதிரடி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நாட்டின் தங்க இறக்குமதியால் வர்த்தக பற்றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் கோவில்களில் இருப்பு உள்ள நகைகளை பொது பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகில் தங்க பயன்பாட்டில் இந்திய மக்கள் முன்னிலையில் உள்ளனர். ஆனால் இந்தியாவில் தங்க உற்பத்தி குறைவாக உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்க இறக்குமதியில் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் இதை கருத்தில் கொண்டு கோவில்களில் இருப்பு உள்ள, உபயோகத்தில் இல்லாத நகைகளை பொது பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Kerala govt. opposes centre's decision to use temple gold

இதனால் தங்கம் பற்றாக்குறை நீக்கும், அன்னிய செலவாணி கையிருப்பு நீடிக்கும். மேலும் இதனால் கோவில்களுக்கும் வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இதற்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது குறித்து கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி கூறுகையில்,

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக்குறையை சரிசெய்ய கோவில்களில் உள்ள இருப்பு நகைகளை வங்கியில் வைப்பாக வைத்து அதன் மூலம் கோவில்களுக்கு வட்டி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை ஒரு போதும் கேரள அரசு ஏற்காது. கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் இருக்கும் விலை மதிக்க முடியாத நகைகளை தொடக்கூட விட மாட்டோம். எந்த கோவிலின் நகைகளையும் பக்தர்களின் அனுமதியின்றி தொடவிட மாட்டோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+