கேரள மாநில ஐஎஸ் அமைப்பின் தலைவரை ஆப்கனில் கொன்ற அமெரிக்க படைகள்!
கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஐஎஸ் அமைப்பின் தலைவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் ஆப்கனில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதாக தகவல்கள் எழுந்துள்ளன.
கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஷீத் அப்துல்லா. என்ஜினியரிங் படித்த இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஐஎஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டார். இதையடுத்து இவர் தனது மனைவி ஆயிஷா என்கிற சோனியாவுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் டெஹ்ரான் ஆகிய நாடுகள் வழியாக இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு சென்றார்.

இவரது மனைவி ஆயிஷாவும் ஐஎஸ் அமைப்பில் உள்ளார். ஆப்கன் சென்றவுடன் ஐஎஸ் அமைப்பில் சேருமாறு ஏராளமானவர்களுக்கு ஆடியோவில் பிரச்சாரம் செய்து அழைத்தார். இது வரை அவர் 90 ஆடியோக்களை டெலிகிராம் ஆப் மூலம் அனுப்பியுள்ளார்.
கேரள அமைப்பின் தலைவராக இருந்த ஷாஜீர் மங்களசேரி அப்துல்லா என்பவரை ஆப்கனில் கொன்று ரஷீத் அப்துல்லா அந்த அமைப்பின் தலைவரானார். இந்த நிலையில் எப்போதும் சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அப்துல்லா கடந்த இரு மாதங்களாக அமைதியாக இருந்தார்.
இவருக்கு கீழ் 21 பேர் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் இவருக்கு என்ன ஆச்சு என்ற கேள்வி எழுந்தது. அப்போது பெயர் கூற விரும்பாத ஐஎஸ் அமைப்பின் நிர்வாகி ஒருவர் அப்துல்லா ஒரு மாதத்துக்கு முன்பே அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார். இதில் 3 இந்திய சகோதரர்கள், இரு இந்திய பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications