நடுவானில் சிகரெட் பிடித்த பயணி... தடுத்த பணிப்பெண்ணிடம் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து அசிங்கம்
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் சிகரெட் பிடிக்க தடை விதித்த பணிப்பெண்ணிடம் ஆபசமாக நடந்து கொண்ட பயணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லி: விமான பணிப்பெண்ணிடம் பேண்ட் ஜிப்பை கழற்றி அசிங்கமான முறையில் நடந்து கொண்ட நபரை டெல்லி விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசில் சிக்கிய நபரின் பெயர் அப்துல் ஷாஹித் சம்சுதீன் என்பதாகும். 24 வயதான அந்த நபர் கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்தவர். எலக்ட்ரீசனாக வேரை செய்யும் அவர் வேலை விசயமாக சவுதி சென்றிருந்தார்.

சனிக்கிழமையன்று சவுதி ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக சவுதியில் இருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்தார். நடு வானில் விமானம் பறந்த போது சிகரெட் பற்ற வைக்க லைட்டரை எடுத்தார். அப்போது அங்கு வந்த பணிப்பெண், சிகரெட் பிடிக்க தடை உள்ளதாக கூறினார்.
அப்துல் ஷாஹித்திற்கும் விமான பணிப்பெண்ணிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, அப்போது திடீரென அப்துல் அந்த அசிங்கமான காரியத்தை செய்தார். பேண்ட் ஜிப்பை கழற்றியதோடு மிக மிக அசிங்கமாக பேசினார். உடனே அந்த பணிப்பெண் சக ஊழியர்களை உதவிக்கு அழைத்து புகார் செய்தார்.
அப்துலை பிடித்து அழைத்து சென்ற ஊழியர்கள், விமானம் டெல்லியில் தரை இறங்கிய உடன் விமான நிலைய காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
உரிய விசாரணை நடத்திய போலீசார், அப்துல் மீது பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துதல், தரக்குறைவாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
வெளிநாட்டுக்கு வேலைக்குப் போனாமா வந்தோமா என்றில்லாமல் விமானத்தில் சில்மிஷம் செய்து இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications