கேரளாவில் மாவோயிஸ்ட் – போலீசார் கடும் துப்பாக்கிச் சண்டை... பதற்றம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் போலீசாருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து வயநாடு பகுதிக்குள் மாவோயிஸ்ட்டுகள் நுழைந்துள்ளதாக, உளவுத்துறை கடந்த ஆண்டு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வெள்ளமுடா அருகே உள்ள சப்பா பழங்குடிகள் காலனி பகுதிக்குள் நேற்று போலீசார் சென்றனர். அப்போது, அந்த பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து, பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கியால் சுட்டதில், மாவோயிஸ்ட்டுகள் அங்குள்ள வனப்பகுதிக்குள் தப்பி சென்றுவிட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்பாக உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கூறும்போது, வயநாடு மாவட்டம், வெள்ளமுண்டா வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் போலீசார் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது, சிறப்பு படைகள் (தண்டர்போல்ட்) வெள்ளமுண்டா வனப்பகுதிக்கு அனுப்பப்படுள்ளன என்றும் கூறியுள்ளார்.
''அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் யாரும் கவலையடைய தேவையில்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்" என்றும் கேரள உள்துறை அமைச்சர் சென்னிதலா கூறியுள்ளார். முதற்கட்ட அறிக்கையில் எவ்வித உயிரிழப்புகளும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications