எனது 75 ஆண்டு அரசியல் வாழ்க்கை வரலாறு தெரியுமா..?: ஆம் ஆத்மிக்கு அச்சுதானந்தன் கேள்வி
திருவனந்தபுரம்: கேரள மாநில முன்னாள் முதல்வரும், சிபிஎம் மூத்த தலைவருமான அச்சுதாதனந்தன், ஆம் ஆத்மியில் இணையுமாறு அக்கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுத்த அழைப்பை நிராகரித்துள்ளார்.
அச்சுதானந்தன் தற்போது, கேரள எதிர்கட்சி தலைவராக உள்ளார். இந்நிலையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அச்சுதானந்தனை ஆம் ஆத்மி கட்சியில் இணைய அழைப்பு விடுத்திருந்தார்.
அப்போது அவர், ‘எங்கள் கட்சியில் இணைய அச்சுதானந்தனை அழைக்கிறேன். தற்போது நமக்கு உள்ள மிக முக்கியமான எதிரிகள் மதவாதமும், ஊழலும்தான் .நாட்டின் எதிர்காலத்தை மாற்றி அமைக்க நமக்கு இதுதான் சரியான தருணம்' எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, அரவிந்த் கெஜ்ரிவாலின் அழைப்பை நிராகரிக்கும் வகையில் பதிலளித்துள்ளார் அச்சுதானந்தன். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது :-
‘கெஜ்ரிவால் எனது 75 ஆண்டுகால அரசியல் வரலாற்றை அறியாமல் உள்ளார். அதனால்தான் அவர் என்னை ஆம் ஆத்மியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.நான் எனது பள்ளி பருவ காலத்திலேயே சிபிஎம் காக உழைக்க ஆரம்பித்து விட்டேன்.நான் எப்போதுமே சிபிஎம் கட்சிக்கு ஆதரவாகத்தான் இருப்பேன், அதற்காகத்தான் உழைப்பேன்' எனத் தெளிவு படுத்தியுள்ளார்.
-
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications