50 ஆயிரத்திற்கு மூக்கு கண்ணாடி வாங்கிய சபாநாயகர்.. கேரளா அரசு பணத்தில் நடந்த கொள்ளை!
கேரள சட்டசபை சபாநாயகர் மூக்கு கண்ணாடி வாங்க 50 ஆயிரம் செலவு செய்துள்ளார்.
திருவனந்தபுரம்: அரசியல் தலைவர்கள் மக்கள் வரிப்பணத்தில் சாதாரண பொருட்களை கூட அதிக விலைக்கு வாங்கி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கம். பொதுவாக கேரளாவில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மிகவும் குறைவு.
ஆனால் தற்போது எல்லாவற்றிற்கும் சேர்த்து பெரிய குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி கேரள சட்டசபை சபாநாயகர் மூக்கு கண்ணாடி வாங்க 50 ஆயிரம் செலவு செய்துள்ளார்.
இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த செலவு குறித்து அவர் வித்தியாசமான விளக்கமும் கொடுத்துள்ளார்.

என்ன விதி
கேரளா அரசு விதியின் படி அங்கு இருக்கும் எம்.எல்.ஏக்கள் அரசு பணத்தில் மருத்துவ செலவு செய்து கொள்ளலாம். அதேபோல் அவர்களது நெருங்கிய குடும்ப உறவினர்களுக்கும் செலவு செய்யலாம். இதற்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து தனி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

பிரச்சனை
இந்த மருத்துவ நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக அடிக்கடி புகார் எழுந்தது. இதனால் வி. பினு என்பவர் இதுகுறித்து கண்டுபிடிக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதுவரை யாருக்கு எவ்வளவு மருத்துவ செலவு செய்யப்பட்டு இருக்கிறது என்று கேட்டார்.

பெரிய பிரச்சனை
இதன் மூலம் கேரள சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் 50000 ரூபாய்க்கு மூக்குக்கண்ணாடி வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. 45000க்கு கண்ணாடியும், 5000 க்கு பிரேமும் வாங்கி இருக்கிறார். கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா 28 ஆயிரத்திற்கு கண்ணாடி வாங்கியுள்ளார்.

என்ன பதில்
இதற்கு தற்போது இவர் பதில் அளித்துள்ளார். அதில் ''எனக்கு கண்பார்வை மிகவும் மோசமாக இருந்தது. கண் உறுத்திக் கொண்டே இருந்தது. எனவே டாக்டர் நல்ல கண்ணாடி போட சொன்னார். அதனால்தான் இது வாங்கினேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications