Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொத்துக்காக தந்தையை கொன்று உடலை துண்டுகளாக்கி பல இடங்களில் வீசிய சாப்ட்வேர் என்ஜினியர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் தனது தந்தையை சுட்டுக் கொன்று அவரின் உடலை பல துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசியுள்ளார்.

கேரள மாநிலம் செங்கணூரை சேர்ந்தவர் ஜாய் வி ஜான்(68). அவரது மனைவி மரியம்மா. அவர்களின் மகன் ஷெரின் ஜான்(36). ஷெரின் கேரளாவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.

Kerala Techie Kills Father, Scatters Body Parts In Different Places

ஜாய் கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். கடந்த புதன்கிழமை ஏ.சி.யை ரிப்பேர் செய்ய ஜாய் தனது மகனுடன் கடைக்கு சென்றார். கடைக்கு சென்ற ஜாய் வீடு திரும்பாததையடுத்து அவரின் மனைவி மரியம்மா இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் ஷெரினிடம் விசாரித்தபோது அவர் தனது தந்தையை சுட்டுக் கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி பல இடங்களில் வீசியது தெரிய வந்தது. ஷெரின் காட்டிய இடங்களில் இருந்து கை, தலை மற்றும் பிற உடல் பாகங்கள் கிடைத்தன.

அந்த பாகங்கள் மரபணு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷெரினை கைது செய்துள்ளனர். தந்தை, மகன் இடையேயான சொத்து பிரச்சனையால் இந்த கொடூர கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+